எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 25 May 2020

படித்ததில் பிடித்தவை (“யாழினியின் காடே அதிர்ந்தது” – மு.அறவொளி கவிதை)


*யாழினியின் காடே அதிர்ந்தது*

மான் கூட்டம் புலியைத் துரத்த

சிட்டுக்குருவி
சிங்கத்தின் பிடரிக்குள்
புகுந்து விளையாட

கரடி கழுத்தில்
குரங்கொன்று
பேன் பார்க்க

முதலையின் முதுகில்
முயல்குட்டி பயணிக்க

சாப்பிட வாடி
என்ற அதட்டலில்
யாழினியின் காடே
அதிர்ந்தது..!”

           *மு.அறவொளி*

No comments:

Post a Comment