தீக்குச்சி
தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது.  
எல்லோரும் 
விளக்கை வணங்கினார்கள். 
பித்தன்  
கீழே எறியப்பட்ட  
தீக்குச்சியை  வணங்கினான்.
“ஏன் தீக்குச்சியை 
வணங்குகிறாய்?”
என்று கேட்டேன்.  
“ஏற்றப்பட்டதை விட 
ஏற்றி வைத்தது 
உயர்ந்ததல்லவா” என்றான்.
-  
கவிக்கோ அப்துல்
ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)
 
 
முதல் மூன்று பத்திகளுடன் முடித்து 'ஏன்'ஐ வாசகர்கள் கற்பனைக்கு விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 'ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்'என்ற குறிப்பு வேறு உள்ளதே.
ReplyDeleteஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்ற குறிப்பு நான் சேர்த்தது.
Delete