எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 16 November 2018

அமர காவியம்



கிராமத்து தோட்டத்தில்
உயர்ந்து வளர்ந்த
இரண்டு தேக்கு மரங்களை
நகரத்தில் வீடு
கட்டப் போகும்
மகனுக்காக
வளர்த்து வந்தார்
தந்தை

நகரத்தில் மகனுக்கு
வங்கி கடன் கிடைப்பதில்
தாமதமாகி மரத்தின்
ஆயுள் நீண்டுக் கொண்டிருந்தது…

மகன் கிராமத்துக்கு
வரும் போதெல்லாம்
தேக்கு மரத்தை
வெட்டுவதைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கும்
தந்தையிடம்,
வங்கி கடன் தாமதமாவதால்
சற்றே பொறுத்து
வெட்டலாம் என
சாக்கு சொல்லி
அழகான அந்த மரங்கள்
வெட்டப்பட போவதை தவிர்த்து
மரத்தின்
ஆயுளை மேலும்
நீட்டிக்க செய்வான் மகன்…

மகனின் கருணையில்
குளிர்ந்துப் போனாலும்,
வங்கி கடன்
தனது ஆயுளை தீர்மானிப்பது
பிடிக்காத அந்த மரங்கள்
வெட்டுவதற்கு ஏதுவாக
சரித்துக் கொண்டன
இப்போது வீசிய

கஜா புயலில்..!

-     கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment