எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 10 February 2016

கடவுளும்... குழந்தையும்...



“கடவுள்
குழந்தைகளாக
பிறக்கிறார்.

குழந்தைகள்
மனிதர்களாக
வளர்கிறார்கள்.

மனிதர்கள்
நல்லவனாகவும்
கெட்டவனாகவும்
ஆகிறார்கள்.

நல்லவனை
கெட்டவன்
கொன்று விடுகிறான்.

கெட்டவன்
தண்டனை
பெறுகிறான்.

ஒரு கடவுள்
கொல்லப் படுகிறார்.

ஒரு கடவுள்
தண்டனைப் பெறுகிறார்.

பின்குறிப்பு:

எந்தக் கடவுளும்
நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே...

பின்
நல்லவன் ஆவதும்
கெட்டவன் ஆவதும்
அவர்கள் வளரும்
சூழ்நிலையால்தான்..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment