எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 January 2017

படித்ததில் பிடித்தவை (“மனைவியிடம் சொன்னவை” – யுகபாரதி கவிதை)


“தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க

வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்குக் கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்

சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு

வேலைக்கு கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.”

-        கவிதை: யுகபாரதி & ஓவியம்: இளையராஜா.

No comments:

Post a Comment