எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 11 February 2017

படித்ததில் பிடித்தவை (கோபமுடையவர்கள் - யுகபாரதி கவிதை)


கோபமுடையவர்கள்...

"போக்குவரத்து நெரிசலுக்கிடையே 
நீந்தும் வாகனத்தில் 
நானும் ஒருவனாக  அமர்ந்திருந்தேன்.

ஒருவரை ஒருவர் 
அதீத வெறுப்போடும் 
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்.

சனப்பெருக்கத்துக்கு 
யார் யாரெல்லாம் காரணமென்று 
வசைப்பாடத் தொடங்கினர்.

அரசு ஏன் இதற்கெல்லாம் 
வழிவகை செய்வதில்லை என்றும் 
யாவும் ஊழல் மலிந்ததன் 
உபாதை என்றும்  பொருமினர்.

வஞ்சிக்கும் அதிகாரிகளை 
வாரித் தூற்றி வயிறெரிய 
சபித்தனர்.

பெரும் இரைச்சலுக்குப்பின் 
மெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும் 
மக்களிடமிருந்த கோபங்களும்..!"  


- யுகபாரதி.

No comments:

Post a Comment