எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 2 July 2016

இறைவி


“அமாவாசை அன்று
திருஷ்டி சுற்றி உடைக்க
நூறு ரூபாய்க்கு
பூசணிக்காய் வாங்கினாள்
குடும்பத்தலைவி.

மாமனார், மாமியார்
வீட்டிலேயே இருப்பார்கள்.
கல்லூரி முடித்து
முதலில் வருவாள்
மகள்.
கணவன் வேலை முடிந்து
எட்டு மணிக்குதான்
வீட்டுக்கு வருவார்.
சாப்ட்வேர் வேலை
மகனுக்கு.
இரவு ஒன்பதோ பத்தோ
ஆகிவிடும் வீடு திரும்ப.

வீட்டிலுள்ள எல்லோரையும்
ஒன்று சேர்த்து உடைப்பதுதான்
பெரிய வேலை.

இரவில்
பூசணியை உடைக்க
ஆள் தேடுவதும்
சற்றே சிரமம்தான்.

எப்படியோ உடைப்பதற்கு
ஒத்துக்கொண்டார்
பக்கத்துக்கு வீட்டில்
வேலைசெய்யும்
பார்வதி அம்மா.

மகன் வந்தப்பிறகு
எல்லோரையும்
ஒன்றாக நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி
அந்த பூசணிக்காய்
உடைக்கப்பட்டது
தெருவில்.


தனக்கு கொடுத்த
ஐம்பது ரூபாயில்
காய்கறி கடையில்
பூசணிக்கீற்று ஒன்று
வாங்கி சென்றார்
பார்வதி அம்மா
தன் வீட்டில்
சாம்பார் வைக்க..!”

-   கி. அற்புதராஜு.

3 comments:

  1. Very nice.In 50Rs we can get only get a slice?

    ReplyDelete
  2. ஸ்ரீராம்1 December 2020 at 18:31

    அருமையான சமுதாயப் பார்வை தங்களுக்கு.

    ReplyDelete