எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 24 November 2015

படித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - நா.முத்துக்குமார் கவிதை)


ஏழு பள்ளிகளில் படித்தவன்

“ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்.

சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன.
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே.

ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்..!”

-          நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment