எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 16 November 2021

படித்ததில் பிடித்தவை (“மறதியின் மணம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மறதியின் மணம்*

 

யாரோ மறந்துவிட்டுப்போன பூக்கள்

பேருந்தின் ஜன்னலோரத்தில் இருந்தன.

எட்டிப்பார்த்த பூவிதழ்கள்

காற்றில் அசைந்தன.

அது அநாதையாகிவிட்ட

குழந்தை ஏக்கம் மனதில் ஓடியது.

 

அடுத்த நிறுத்தத்தில்

வந்து ஏறிய பெண்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

அதை மடியில் எடுத்து வைத்தாள்.

அதிலிருந்து ஒரு பூவை எடுத்து

தலைக்கு வைத்துக்கொண்டாள்

புன்னகை மணக்க.

 

எங்கேயாவது எப்போதாவது

மனதை வாடவிடாமல்

யாராவது பார்த்துக்கொள்கிறார்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்17 November 2021 at 08:13

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்17 November 2021 at 08:23

    நீர் அடித்தாலும்
    நீர் விலகாது.

    மிக அருமை.

    ReplyDelete