எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 15 November 2021

படித்ததில் பிடித்தவை (“திரும்பிப் பார்க்கிறது” – யுகபாரதி கவிதை)

 


*திரும்பிப் பார்க்கிறது*

 

போகும்போது

கூப்பிடக் கூடாதென்று

தயங்கி நிற்கிறாய்.

 

கூப்பிட நினைத்து

மூச்சிரைக்க

ஓடி வருவாயோவெனத்

திரும்பிப் பார்க்கிறது

என் காதல்..!”

 

*யுகபாரதி*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *யுகபாரதி*
    தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்
    கொண்டவர்.
    கணையாழி, படித்துறை ஆகிய
    இதழ்களின் ஆசிரியக் குழுவில்
    ஆறு ஆண்டுகளுக்கு மேல்
    இலக்கியப் பங்களிப்புச்
    செய்தவர்.
    தொடர்ந்து இரண்டு முறை
    சிறந்த கவிதை நூலுக்-கான
    தமிழக அரசின் விருதைப்
    பெற்றவர்.

    இதுவரை பத்து கவிதைத்
    தொகுப்புகளும் பத்து கட்டுரைத்
    தொகுப்புகளும் தன்வரலாற்று
    நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
    இந்நூல், இவருடைய
    பதினொன்றாவது கட்டுரைத்
    தொகுப்பு.
    வெகுசனத் தளத்திலும் தீவிர
    இலக்கியத் தளத்திலும் ஒருசேர
    இயங்கிவரும் இவருடைய திரை
    உரையாடல்கள் குறிப்பிட்டுச்
    சொல்லத்தக்க கவனத்தைப்
    பெற்று வருகின்றன.

    திரைமொழியையும் மக்கள்
    மொழியையும் நன்கு உணர்ந்த
    இவர், ஏறக்குறைய ஆயிரம்
    திரைப்பாடல்களுக்கு மேல்
    எழுதியிருக்கிறார்.

    *எழுதிய நூல்கள்*

    கவிதைத் தொகுப்புகள்:
    1. மனப்பத்தாயம்
    2. பஞ்சாரம்
    3. தெப்பக்கட்டை
    4. நொண்டிக்காவடி
    5. தெருவாசகம்
    6. அந்நியர்கள் உள்ளே வரலாம்

    கட்டுரைத் தொகுப்புகள்:
    1. கண்ணாடி முன்
    2. நேற்றைய காற்று
    3. ஒன்று
    4. நடுக்கடல் தனிக்கப்பல்
    5. வீட்டுக்கு வெளியே வெவ்வேறு
    சுவர்கள்
    6. அதாவது
    7. நானொருவன் மட்டிலும்
    8. நண்மை

    ReplyDelete
  2. செல்லதுரை15 November 2021 at 18:31

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்16 November 2021 at 17:20

    Very nice
    in a short form.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்17 November 2021 at 08:12

    பரஸ்பரம் எதிர்பார்ப்பு
    காதலில் ஒரு தவிர்க்க
    முடியாத நிகழ்வு.

    ReplyDelete