எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 6 March 2019

தட்சணை


சாமி கும்பிட்டபின்
நூறு ரூபாய்க்கு
சில்லறை கேட்ட
பக்தனுக்கு
தீப ஆராதனை
தட்டிலிருந்து எடுத்து
பத்து பத்து ரூபாயாக
சில்லறை கொடுத்தார்
கோவில் அர்ச்சகர்.

அதிலிருந்து
பக்தன் கொடுத்த
பத்து ரூபாய்
தட்சணையை மறைத்து
நூறு ரூபாய் மட்டும்
தெரியும் படி
தட்டின் மீது
வைத்தார் அர்ச்சகர்.

அடுத்து வரிசையில்
வரும் பக்தர்கள்
நூறு ரூபாயாக
வைப்பார்களா என்று
அர்ச்சகரும்,
பரமனும்
அருகில் அமர்ந்திருக்கும்
பார்வதியும்
ஆவலுடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்..!


-   கி. அற்புதராஜு.

2 comments:

  1. எதனால் பார்வதி மட்டும்?

    ReplyDelete
  2. இப்போது பரமனும் பார்க்கத் தொடங்கிவிட்டார்...
    சுட்டி காட்டியமைக்கு நன்றி..!

    ReplyDelete