எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 20 January 2018

மாநகரத்தில் அணிலும், எறும்பும் மற்றும் நானும்...


"அணில்கள் 
கேபிள் வயரின்
மேல்தான் பயணிக்கின்றன...

மரங்களில்
பயணிக்க முடிவதில்லை
மாநகரத்தில்...

எறும்புகள்
கோல மாவுகளை
எடுத்து செல்வதில்லை...

எலக்ட்ரிக் பேட்டால் அடித்த
கொசுக்களை
இழுத்துச் செல்கின்றன
மாநகரத்தில்...

கிராமத்தில்
தேர் ஓடும்
பெரிய வீதிகளில்
எதிர் வீடு வரை நீண்டிருக்கும்
மார்கழி மாத கோலங்களை
மிதிக்காமல் தாண்டி தாண்டி
நடந்து சென்ற நானும்...

டாஸ்மாக்கில்
தண்ணி அடித்தவன் போல
வளைந்து நெளிந்து கடக்கிறேன்
இரு சக்கர வாகனத்தில்
மாநகரத்தின் சந்துகளில்
போடப்பட்ட
சிறிய கோலங்களை..!"

- கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment