எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 9 December 2016

படித்ததில் பிடித்தவை (“காத்திருத்தல்” – திவ்யா கவிதை)


காத்திருத்தல்...
‘கிளம்புகிறேன்’ என்று சொல்லாதே
வழியனுப்ப மாட்டேன்.
‘போய்விட்டு வருகிறேன்’ என்றும் சொல்லாதே
‘போய் வா’ என்றும் சொல்ல மாட்டேன்.
‘கொஞ்ச நேரம் கண்களை மூடு
போய் ஒளிந்துகொள்கிறேன்’ என்று சொல்.
கண்களை மூடுகிறேன்
திறப்பதற்குள் போய்விடு.
நீ திரும்பி வரும் வரை
என் அறைக்குள்ளேயே
உன் வாசத்தின் வழித்தடத்தில்
என்னை நானே தேடிக்கொண்டிருப்பேன்.
எத்தனை நாள் கழித்து வந்தாலும்
எத்தனை வருடம் கழித்து வந்தாலும்
எத்தனை யுகங்கள் கழித்து வந்தாலும்
சொல்லாமல் கொள்ளாமல் வா.
கதவைத் திறந்தவுடன்
நானே உன்னைக் கண்டுபிடிப்பதைப் போல
இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொள்வேன்.
அந்த நொடியில்
நான் சிரித்தாலும் சிரிப்பேன்
அழுதாலும் அழுவேன்.
என் முத்தத்தைத் தவிர பதிலுக்கு
எதுவும் பேசக்கூடாது நீ..!

-  திவ்யா மாரி செல்வராஜ்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete