எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 23 March 2016

சிக்கல்


“அவசரமாக ஓடிவந்து
ரயிலைப் பிடித்த அந்த
வயதானப் பெண்
உட்கார்ந்தவுடன்
சற்றே தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
தான் வாங்கி வந்த
உதிரிப்பூக்களை
கட்டுவதற்கு முன்
எடுக்கத் துவங்கினாள்
நூல்கண்டின் சிக்கலை.

எதிரே அமர்ந்திருந்த
இளம்வயதுப் பெண்
நிதானமாக
ஒலிப்பெருக்கிகளை
காதில் பொருத்தி
மறுமுனையை
கைப்பேசியில்
சொருகப் போனவளும்
எடுக்கத் துவங்கினாள்
வயரின் சிக்கலை..!”

-   கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment