எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 17 September 2015

படித்ததில் பிடித்தவை (அப்பா – கனிமொழி கவிதை)


அப்பா

“சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா.

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது.

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது.

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது.

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது.

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது.

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?
                                
                                -  கனிமொழி.


[தேக்கா நிலையம் (Tekka Centre) என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி. இதில் உணவகங்களும், பிற கடைகளும் உள்ளன.]

No comments:

Post a Comment