எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 15 August 2023

படித்ததில் பிடித்தவை (“என் கண்களில்...” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*என் கண்களில்...*

 

கைதட்டிக் கூப்பிட்டவர்

அப்பா போலிருந்தார்.

அருகில்போய் கேட்டேன்.

ஒன்னுமில்ல தம்பி

என் பையன் சாயல்ல இருந்தீங்க

அதான் ஒருவாட்டி

பாத்துக்கலாம்னு கூப்பிட்டேன்.’

கண்களைத் துடைத்துக்கொண்டார்.

ஏன் அழறீங்க..?’ என்றேன்.

அவன் போயி சேர்ந்துட்டான் என்றார்.

வேறெதும்

சொல்லிக்கொள்ளாமல்

திரும்பி நடந்தேன்.

என் கண்களில்

நீர் இருந்தது..!

 


*
ராஜா சந்திரசேகர்*



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்.15 August 2023 at 11:28

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. பிரபாகரன் R15 August 2023 at 12:10

    🙏

    ReplyDelete
  4. கெங்கையா15 August 2023 at 14:50

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. செந்தில் குமார் J15 August 2023 at 16:18

    அருமை.

    ReplyDelete
  6. வெங்கடபதி15 August 2023 at 16:19

    🙏

    ReplyDelete
  7. 👌touching.

    ReplyDelete