எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 July 2023

படித்ததில் பிடித்தவை (“கடைசி ராப்போஜனம்” – வண்ணதாசன் கவிதை)

 


*கடைசி ராப்போஜனம்*

 

கிறுக்குத் தனமாக,

இன்றைய இரவுச் சாப்பாடுதான்

என் கடைசி ராப்போஜனம்என்று

நினைத்துக் கொண்டேன்.

 

மெஸ்ஸிலிருந்து

சாப்பாடு விநியோகிப்பவரிடம்

இன்று அதிகம்

பேச வேண்டும் என்று ஆசை.

 

அவரிடம் சொல்ல

ஒரு ஸென் கதையைத்

துடைத்து வைத்தேன்.

 

ஆட்டோ பழுதினால்

அவர் மிகப் பிந்தி வந்தார்.

நான் தூக்குச் சட்டியை 

வாங்கின கையோடு கேட்டேன்,

நாளை காலையில் பூரி கிழங்கு தானே..?!

 


*
வண்ணதாசன்*



10 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. செல்லதுரை29 July 2023 at 06:19

    மிக அருமை.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K29 July 2023 at 07:51

    👍👍

    ReplyDelete
  4. யதார்த்தம்

    ReplyDelete
  5. கடைசி என்பது இல்லை - Ramesh

    ReplyDelete
  6. Venkatraman, Ambur29 July 2023 at 09:02

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. ஸ்ரீராம்29 July 2023 at 10:38

    ஆசை..! ஆசை..!
    எல்லோருக்கும்
    வாழ ஆசை..!

    ReplyDelete