எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 16 March 2023

*சந்திக்காமலே...*

 


எனக்கும் அவரை

நன்றாகத் தெரியும்.

அவருக்கும் என்னை

நன்றாகத் தெரியும்.

 

அவர் என்னை

பார்க்காத போது

நான் அவரைப்பார்த்தேன்.

அவரும் நான்

பார்க்காத போது

என்னைப் பார்த்திருப்பார்.

 

நான் அவரை 

பார்க்க முயற்சிக்கும்போதெல்லாம்...

அவர் என் கண்களை சந்திக்கவில்லை.

அவருக்கும் எனது கண்கள்

சிக்கவில்லையோ... என்னவோ...

 

அன்றைய தினம்... ஏனோ... 

ஒருங்கிணையவேயில்லை

இருவரின் பார்வையும்..!

 

அந்த ரயில் பிரயாணத்தில்

இறுதி வரை சந்திக்காமலே

இறங்கி விட்டோம்..!

 

*கி.அற்புதராஜு*

(16.03.2023)


10 comments:

  1. Arumai Sir! ❤️

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete
  3. அருமை

    ReplyDelete
  4. ஸ்ரீராம்11 August 2023 at 20:27

    அருமை.

    ReplyDelete
  5. வெங்கட்ராமன், ஆம்பூர்.11 August 2023 at 20:28

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  6. பிருந்தா12 August 2023 at 11:57

    சில சமயங்களில்
    சிலரது பார்வையை
    தவிர்க்கவும்
    வேண்டியிருக்கிறது...

    அருமையான கவிதை..!

    ReplyDelete