*அதற்குள்*
“அதற்குள்
அடுத்த
தீபாவளி வந்துவிட்டது.
சென்ற
தீபாவளியின்
கரிந்த
மத்தாப்புகளையே
இன்னும்
நான் செடி மறைவிலிருந்து
எடுத்துப்போடவில்லை.
அதற்குள்
அடுத்த
காதல் வந்துவிட்டது.
சென்ற
காதலின்
ஈமச்சடங்குகளையே
இன்னும்
நான்
செய்து
முடிக்கவில்லை.”
*மனுஷ்ய
புத்திரன்*
No comments:
Post a Comment