“மாடியில்
தொட்டிச் செடிகளுக்கு
தினமும்
தண்ணீர் ஊற்றும்
அப்பா...
உடம்பு சரியில்லாமல்
இரண்டு நாட்களாக
படுக்கையில்..!
சற்றே வாடிப்போன
செடிகள் எல்லாம்
அப்பா வருவாராயென
படியை பார்த்தப்படியே...
மாலையில்
அப்பாவுக்கு ஆறுதலாக
மழைப் பெய்ய
துவங்குகிறது...
செடிகள்
அப்பாவைப் பற்றிய
கவலையுடன்
மழை நீரில்
நனையத்
தொடங்கின..!”
அருமை... அருமை...
ReplyDelete