எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 23 November 2019

படித்ததில் பிடித்தவை (“தொடர்பு எல்லைக்குள்” – கல்யாண்ஜி கவிதை)


*தொடர்பு எல்லைக்குள்*

ஒரு சிறு பறவை
எங்கள் வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து
எதிர் வீட்டு நெல்லி மரத்திற்கு
மாறி மாறிப் பறக்கிறது.
இப்போது எங்கள் வீட்டில் நெல்லிமரமும்
எதிர்வீட்டில் கருவேப்பிலையும்
வளர்ந்துகொண்டு இருக்கிறது
மாறி மாறி.
                        - கல்யாண்ஜி.

No comments:

Post a Comment