எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 23 February 2018

பற்றி படறுதுக் கொடி



நேற்று நண்பர் வீட்டில்
பீர்க்கங் கொடி ஒன்று
வேப்ப மரத்தின் அருகில்
முளைத்து
மரத்தை பற்றிக்கொண்டே
மேல் நோக்கி
படர்ந்துக் கொண்டிருந்ததை
வியந்துப் பார்த்து
கைப்பேசியில்
படமாக்கினேன்.

இன்று காலை
கிராமத்திலிருந்து
ஒரு இறப்பு செய்தி.
குறைந்த வயது
கோவில் குருக்கள் அவர்.
படிக்கும் குழந்தைகள்.
வேறு வருமானம்
இல்லா வீடு.
‘குருக்களின் மனைவியின்
குடும்பத்தார் அன்பானவர்கள்,
பண்பானவர்கள்
தாங்கிக் கொள்வார்கள்
என்றார் உறவினர்.

பற்றி படறும் கொடியும்
அதை தாங்கும் வேப்பமரமும்
ஏனோ நினைவுக்கு
வந்துச் சென்றது..!

-    கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment