எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 17 February 2018

படித்ததில் பிடித்தவை (“தீராத நினைவு” - வி.யோகேஷ் கவிதை)


தீராத நினைவு
"நம் கடந்த காலங்கள்
ஒரு தேர்ந்த ஓவியனின்
வரைபடப் புத்தகம் போன்றது.

தோன்றும் பொழுதுகளில்
எனக்குப் பிடித்த வர்ணம் தீட்டி
அழகு பார்ப்பதும் பின்பு
நினைவு மயிலிறகை அதற்குள்
சொருகி வைப்பதும்
எனக்கு வாடிக்கையானது.

நேற்று
நாம் பழகிய தருணங்களை
இரு பழக்கூடையில் நிரப்பி
ஒவ்வொன்றையும் இருவரும்
சுமந்த படி பிரிந்தோம்.

தனிமை பசித்திருக்கையில்
ஞாபகப் பழக்கூடையிலிருந்து
ஒவ்வொன்றாய்ப் புசிக்கக் கொடுத்தோம்.

பழக்கூடை தீர்வதற்குள்
மீண்டும் நாம்
சந்திக்க வேண்டும்..!

வி. யோகேஷ்.


No comments:

Post a Comment