எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 13 August 2016

பிஸ்கட்



“எனக்குப் பிடித்த
எள்ளு உருண்டை,
கடலை மிட்டாய்,
பிரிட்டானியா பிஸ்கட்,
பவண்டோ என
ஆசைப்பட்ட
அனைத்தையும்
கடையில் வாங்கி
கைப்பையில்
தினித்துக்கொண்டேன்
நெடுந்தூர ரயில்
பயணத்துக்காக...

எனக்கான பெட்டியில்
தாத்தாவும், பாட்டியும்...
இரண்டு அழகான
குழந்தைகளுடன்
தம்பதிகள்...
முதலில் குழந்தைகளுடன்
பேசத்தொடங்கிய நான்
கொஞ்ச கொஞ்சமாக
எல்லோருடனும் பேச்சு
தொடர்ந்தது...

சற்றே பசியை உணர்ந்த நான்
கைப்பையில் வைத்திருந்த
தீனிக்களை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ள முடியாமல்
நானும் சாப்பிட முடியாமல்
செய்து விட்டார்கள்...

எங்கோ ஏமாற்றித் திருடிய
சில பிஸ்கட் பண்டிட்கள்..!”

-   கி. அற்புதராஜு.

3 comments: