எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 11 August 2019

படித்ததில் பிடித்தவை (“குழந்தையாக நாம்” – சிவநேசன் கவிதை)


குழந்தையாக நாம்...

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்...

நம்முடைய                
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்...

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்...

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை..!

அதை ரசிக்கும்
பொழுதுகளில்...
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!

                -  ந. சிவநேசன்.

No comments:

Post a Comment