எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 1 July 2019

படித்ததில் பிடித்தவை (“ஈரமாக மழை” – மீள் கவிதை)


ஈரமாக மழை

தட்டாம்பூச்சிகள்
தாழப் பறந்தால்
தவறாது மழை என்பாள்
எங்கள் பாட்டி..!

இப்போது
தட்டாம்பூச்சியும்
எங்கள் பாட்டியும்
இருக்கிறார்கள் படமாய்..!

மழை
நினைவில்தான்
இருக்கிறது
ஈரமாக..!

(மீள்).

2 comments:

  1. உண்மைதான்.

    ReplyDelete
  2. மனிதன் இயற்கையின் வரமா சாபமா.

    ReplyDelete