எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 October 2018

படித்ததில் பிடித்தவை (“இப்பொழுது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது...” – க.ஆனந்த் கவிதை)


இப்பொழுது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது...

இந்த மழையில்
நீங்கள்
மொட்டை மாடியில்
காயப் போட்டவற்றை
காப்பாற்ற ஓடுபவராக இருக்கலாம்.

எடுத்துவர மறந்த
குடைக்கு சலித்து
எங்கேனும்
ஒதுங்கி நிற்பவராக இருக்கலாம்.

கண்ணாடி சன்னல் வழியே,
அரிதாகக் கிடைத்த
அவகாசத்தில்
மழையை ரசிப்பவராக இருக்கலாம்.

மழை குறித்த பிரக்ஞையின்றி
அடுத்த வேலைக்கான
அவசரத்தில் இருப்பவராக
இருக்கலாம்.

எப்பொழுதும் போல்
இப்பொழுதும்,
மழை,
மழையாக மட்டுமே
பொழிந்து கொண்டு இருக்கிறது.

- க.ஆனந்த்.

No comments:

Post a Comment