எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 4 January 2016

படித்ததில் பிடித்தவை (மழையொரு கடவுள் - தீபிகா தீபா கவிதை)


மழையொரு கடவுள்
அனேகருக்கு
மழையொரு மகிழ்ச்சி.

ஏழைகளுக்கு
மழையொரு கரைச்சல்.

குழந்தைகளுக்கு
மழையொரு பாடல்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு
மழையொரு விடுமுறை நாள்.

இளைஞர்களுக்கு
மழையொரு திருவிழா.

காதலர்களுக்கு
மழையொரு அட்சதை.

சங்கீதப் பிரியனுக்கு
மழையொரு இசை.

தினக் கூலிகளுக்கு
மழையொரு சுமை.

சூரியனுக்கு
மழையொரு ஓய்வு.

நோயாளிக்கு
மழையொரு பாரம்.

அகதிக்கு
மழையொரு ஞாபகம்.

தனித்திருப்பவனுக்கு
மழையொரு தாய்.

தவளைகளுக்கு
மழையொரு மேடை.

மண்ணுக்கு
மழையொரு வாசம்.

மரங்களுக்கு
மழையொரு பன்னீர்.

கவிஞர்களுக்கு
மழையொரு கவிதை.

கமக்காரனுக்கோ
மழையொரு கடவுள்.

- தீபிகா தீபா.

[கமக்காரன் உழவன், விவசாயி]

No comments:

Post a Comment